அகஸ்தியர் வைத்திய சதகம் – 1

அகஸ்தியர் வைத்திய சதகம் – 1

“காப்பாகச் சிவமுடனே சத்தி கூடிக்
கருவான வாய்வங்கி தனையெ ழுப்பித்
தாப்பாக அனல்கூடி விளைந்து பொங்கி
சம்போக வேளையிலே சாடும் விந்து
நேர்ப்பாக அறுகுநுனிப் பனிபோல் வீழ்ந்து
நிறைந்தோங்கி உதானனங்கே காவ லாகிக்
கோப்பாக தசமாத வரையில் நின்று
குவலயத்தில் வீழ்ந்தாப்போல் வீழுந் தானே.”

ஆணும் பெண்ணும் கூடி குலவி சம்போகம் செய்யும் வேளையில் வாய்வானது எழுந்து உஷ்ணத்தை எழசெய்து, அறுகு நுனிப்பனிபோல் பொங்கி விழும் விந்தானது உதான வாயு காவலோடு பத்து மாதம் வரையில் நின்று கருப்பையை விட்டு குழந்தை இந்த பூமியில் பிறக்கும்.

Share