அகஸ்தியர் வைத்திய சதகம் – 28
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 28*
ஆமிந்த மோகமது பிரியமாச்சு அடுத்த மதமாவதுவே கருவுமாச்சு
ஓமிந்த ஆச்சரியம் கூரமாச்சு உறும் இடும்பை தானும் உதாசீனமாச்சு
வேமந்த வேகமது கொடூரமாச்சு வேறுஇருவினை இரண்டும் விள்ளக்கேளு
தாமந்த நல்வினை தீவினை தான் இரண்டும் தயவான புண்ணியம் தான் நல்வினை தானாச்சே.
*பொருள் :* மோகம் என்பது பிரியம். மதம் என்பது கரு. ஆச்சரியம் என்பது கூரம். இடும்பை என்பது உதாசீனம். வேகம் என்பது கொடூரம் ஆகும். வினைகள் இரண்டு வகைப்படும். எவை எனில் நல்வினை,தீவினை என்பன ஆகும். புண்ணியக் காரியங்கள் செய்வது நல்வினை
Share
Recent Comments