அகஸ்தியர் வைத்திய சதகம் – காப்பு
“அருவுருவா யரூபமுமா யடங்காத பொருளாகி அடங்கலாகி
அருவுவா யண்டபகி ரன்டத்து உள்ளுமாய்ப் புறத்துமாய்
ஒருவுருவா யுயிர்க்குயிரா யுயிரில்நிறைந் தியங்கிநிற்கு மொப்பிலானே
கருவுருவாய் வைத்தியத்தின் சதகமிதை வழுத்தவுநீ காப்புத்தானே.”
உருவமும், உருவமில்லாமலும், இரன்டு அல்லாத அரூபமாகவும், அடங்காத பொருளாகி, சர்வமும் வியாபித்தலும் ஆகி,உருவமும், உருவமில்லாத , இந்த பிரபஞ்சம் முழுவதும்,பிரபஞ்சத்தின் உள்ளுமாகி, வெளியுமாகி, ஒரே உருவாகி, உயிர்க்கு உயிராகி, அந்த உயிரில் நிறைந்து இயக்கத்தை செய்யும் ஈடுஇணை இல்லாதவனும், கருவின் உருவமும் ஆகி நின்ற இறைவா இந்த வைத்திய சதகத்தினை ஆக்கித்தர நீயே உறுதுணையாய் இருப்பாய்.
Share
Recent Comments