திருமந்திரம் – 188

திருமந்திரம் – 188

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.

இன்பம்,துன்பம் ஆகியவைகளை அனுபவிக்க பிறந்த உடல் அவைகளை அனுபவித்து அடங்கி இறந்து போனால் இறந்தவனின் கூட சுகம் அனுபவித்த மனைவி பிள்ளைகள் போகமட்டார்கள். அந்த உடல் உயிரோடு வாழ்ந்த காலத்தில் செய்த புண்ணியமும் பாவமும் தான் கூட செல்லுமே தவிர வேறு ஏதும் செல்லாது.

Share