திருமந்திரம் – 320

திருமந்திரம் – 320

சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாஞ்
சத்தி அருள்தரிற் சத்தன அருளுண்டாஞ்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.

எம்பெருமான் சிவன் கருணைக் கொண்டு அருள் தந்தால், கூடவே பாரசக்தியின் அருளும் கிடைக்கும். அதேபோல் அன்னையின் அருள் கிடைத்தால், பரம்பொருளின் அருளும் தானே கிடைக்கும். சிவனையும் சக்தியையும் உள்வைத்து தியானித்தால் உண்மையாகவே அட்டமா சித்திகளையும் பெறலாம்.

Share