திருமந்திரம் – 35
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி யாட்டவு மாமே.
யாராலும் உருவாக்கப்பாடத தானே உருவான பரம்பொருளான சிவபெருமானை போற்றி வணங்குங்கள் போற்றி புகழுஙள். அவ்வாறு செய்வதினால், எட்டுத்திக்கிலும், விண்ணிலும், மண்ணிலும் படர்ந்து இருப்பவன் நம்மை வழிநடத்துவான், அருள்புரிவான்.
Share
Recent Comments