முருகன் வந்த கரடு

முருகன் வந்த கரடு

முருகன் பழனி செல்லும்முன் திருச்சிராப்பள்ளி சுனைபுகழ்நல்லுரில் உள்ள இந்த கரடுக்கு வந்தார்.(செவிவழி செய்தி)

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார்.

பழனி மலை செல்வதற்க்கு முன் தினை- சுனை நல்லுரில் அமைந்த இந்த கரடில் கார்த்திகேயனின் மயில் வாகனம் வந்து நின்றது. மயில்வாகனம் மேல் அமர்ந்த கார்த்திகேயனோ இந்த குன்று சிறியது என கருதி பழனி குன்றுக்கு சென்றார்.

பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

Share