ராமேஸ்வரம் தீர்த்தம்

ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடுவதின் பலன்….
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: (செல்வவளம்)
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)
5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)
6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)
7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்).
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)
18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)
19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)
20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)
21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை…….

Share