திருமந்திரம் – 751

திருமந்திரம் – 751

*திருமந்திரம் – 751*

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்

ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்

ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்

ஓசை யுணர்ந்த வுணர்விது வாமே.

*பொருள்:* அறிவுருவாகிய சிவபெருமான் உயிர்ப்பின்கண்ணும் திருவுருவின்கண்ணும் ஒப்ப விளங்குவர். உயிர்ப்பை அடக்கியவர் இறைவனை எண்ணுவர். அங்ஙனம் உயிர்ப்படக்கியவர் நெஞ்சினுள் இறைவனும் ஆவியறிவுடன் ஒன்றித்து மேம்பட்டு விளங்குவன்.
ஓசை – உயிர்ப்பு. இறந்தவர் – உயிர்ப்பை அடக்கியவர்.
ஓசை இறந்தவர் – மனம் அடங்கப்பெற்றவர்.

Share