திருமந்திரம் – 1453

திருமந்திரம் – 1453

*திருமந்திரம் – 1453*

தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே

*பொருள்:*
சன்மார்க்க நெறியின்கண் ஒழுகித் திருமுறைவழியாக முப்பொருளின் மெய்ம்மை தெளியாதவர் சிவனை உணரார். சிவனை
உணராமையினால் உயிர்ப்பயன் எய்தார். பயன் எய்தாராகவே அறிவுடைப் பொருளுமாகார். மெய்ம்மை தெளியாதவர் சிவன் திருவடியிணையினைக் கூடிச் சிவமாம் பெருவாழ்வு எய்தார். மெய்ம்மை தெளியாதார் பிறப்பறார்; சிறப்பு உறார்.

Share