கருவூரார் அருளிய மந்திரங்கள்

கருவூரார் அருளிய மந்திரங்கள்

கருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு ?

முதலில் குருவினை மனதால் துதித்து பின்பு மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும். முதலில் குறைந்தது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உபயோகிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் சித்தியாகும் . பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 108 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்கும். இம்மந்திரங்கள் அனைத்தும் கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

தத்புருஷமுகம்-மந்திரங்கள்:

‘நமசிவாய’ என உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.

“நமசிவாயம் லங்க நமசிவாய” என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

“அலங்கே நமசிவாய நமோ” என உச்சரிக்க புகழ் உண்டாகும்.

“அங் சிவாய நம” என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகும்.

“ஊங்கிறியும் நமசிவாய நமா” என உச்சரிக்க மோட்சம் கிட்டும்.

“ஓம் நமசிவாய” என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.

அகோரமுகம்-மந்திரங்கள்:

“சங் கங் சிவாயநமா” என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

“மங் மங் மங்” என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

“வசால வசால சிவாய நமா” என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

“சரனையச் சிவாய நம” என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.

“கேங் கேங் ஓம் நமசிவாயம்” என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

“ஓங் சருவ நம சிவாய” என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவமுகம்-மந்திரங்கள்

“கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்” என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டும்.

“வங் வங் சிங் சிவாய நம”என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியும்.

“சதா சிவாய நம” என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

“ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம” என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்

“சிவாய ஓம்” என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

“ஓங் உங் சிவாய ஓம்” என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

“கிருட்டிணன் ஓம் சிவாய நம” என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்

ஈசானமுகம்-மந்திரங்கள்

“சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ” என உச்சரிக்க

சிவதத்துவத்தை காணலாம்.

“மங் நங் சிவ சிவாய ஓம்” என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

“வங் யங் சிங் ஓம் சிவாய” என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

“சிங் சிங் சிவாய ஓ” என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

“மய நசிவ சுவாக” உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

Share