லால்குடி- சப்தரிஷிஸ்வரர் கோயில்

லால்குடி- சப்தரிஷிஸ்வரர் கோயில்

திருச்சிராப்பள்ளி-திருதவத்துறை(லால்குடில்) சப்தரிஷிஸ்வரர் கோயில்

சப்தரிஷிகள்(ஏழு முனிவர்கள்)
அத்திரி,பிறகு,புலஸ்தியர்,வசிட்டர்,கெளதமர்,ஆங்கீரசர்,மரிசீ

மரிசீனுடைய பேரன் சூரியன்
சூரியனுடைய மகன் சனி
அத்திரினுடைய மகன் சந்திரன்
சந்திரனுடைய மகன் புதன்
ஆங்கிரசருடைய மகன் வியாழன்(குரு பிரகஸ்பதி)
வசிஸ்டரின் பரம்பரையிலிருந்து வந்தவர் செவ்வாய்

ஒருகாலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டிச் சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ் செய்து குழந்தையாகத் தோன்றினார். ரிஷி பத்தினிகள் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகைப் பெண்கள் அறுவரும் குழந்தைக்கு பால் கொடுத்தனர். இச்செய்தியை ஏழு முனிவர்கள் கேட்டு மனைவிமார்களை சபித்து விரட்டி விட்டார்கள். இது காரணமாக முருகனும் ஏழு முனிவர்களை சபிக்க அவர்கள் சாபம் நீங்கும் பொருட்டு திருவையாற்க்குச் சென்று தங்கி அங்கிருந்து இத்தலத்துக்கு வந்து தவம் செய்து தங்கள் சாபம் நீங்கப் பெற்று சிவபெருமான் திருவருளை பெற்றனர். சப்தரிஷிகள் தவம் செய்த தலம் ஆதலால் திருதவத்துறை என்றும், சப்தரிஷிகளுக்கு அருள் புரிந்தமையால் சப்தரிஷிஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றது.

Share