திருவாலங்காடு

திருவாலங்காடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் இரண்டு ஊர்கள் உண்டு. இரண்டு ஊர்களிலும் வட ஆரண்யேச்வர் கோவில் உண்டு. இரண்டு ஆலயங்களிலும் வண்டார்குழலி என்பது தான் அம்மன் பெயர்..இரண்டும் புகழ் பெற்ற இரண்டு சிவ ஸ்தலங்கள் ஆகும்.ஒரு கோவில் அரக்கோணம் அருகில் உள்ளது. திருவள்ளூர் அரக்கோணம் சாலையில் உள்ளது. திருவள்ளூர் அரக்கோணம் ரயில் பாதையில் திருவாலங்காடு ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையம் அருகில் இருந்து வடஆரண்யேச்வர் ஆலயம் செல்ல ஆட்டோ வசதி உண்டு.இந்த திருவாலங்காடு தான் சிவபெருமான் நாட்டியம் ஆடிய ரத்தினசபை.கோவில் குளத்துக்கு அருகாமையில் ஒரு காளி கோவில் உள்ளது. இது சிவன் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கிறது. பொதுவாக காளி கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு தான் சிவன் கோவிலுக்கு செல்வது இங்கு நிலவி வரும் வழக்கம்.நின்ற நிலையில் இருக்கும் காளி நடனம் ஆடும் நிலையில் இருப்பதாக சொல்லபடுகிறது. சிவபெருமானுக்கும் காளிக்கும் நடுவில் ஒரு நடன போட்டி இங்கு நடந்ததாக வரலாறு.நடனம் ஆடும் பொழுது சிவ பெருமானின் தோடு கழண்டு விழ அதை காலால் எடுத்து காதில் அணிந்து கொள்கிறார்.பெண் என்ற காரணத்தினால் காளியால் நடனத்தில் இதை போல் செய்ய முடியவில்லை. நடன போட்டியில் காளி தோல்வி அடைகிறார்.இங்குள்ள சுவாமி பெயர் வட ஆரண்யேஸ்வரர்.அம்மன் பெயர் வண்டார்குழலி.இந்த ஆலயத்தின் மற்றொரு விசேஷம் காரைக்கால் அம்மையார் இங்கு தான் முக்தி அடைந்ததாக சொல்லபடுகிறது.காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி.பரமதத்தன் என்ற வணிகரை மணந்து கொள்கிறார்.வணிக விஷயமாக அவரை சந்தித்த நபர் அளித்த இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு கொடுத்து அனுப்புகிறார்.அந்த சமயம் பார்த்து ஒரு சிவனடியார் புனிதவதியின் வீட்டுக்கு வருகிறார். சிவ பக்தையான புனிதவதி சிவனடியாருக்கு மதிய உணவு படைக்கிறார்.அப்பொழுது தன கணவர் அனுப்பிய இரண்டு மாம்பழங்களில் ஒன்றை கொடுக்கிறார்.புனிதவதியின் விருந்தோம்பலில் மகிழ்ந்த சிவனடியார் ஆசீர்வாதம் செய்து விட்டு செல்கிறார். மதிய உணவின் பொழுது மிச்சம் இருந்த ஒரு மாம்பழத்தை கணவனுக்கு கொடுக்கிறார். அதன் சுவையில் மயங்கி பரமதத்தர் இன்னொரு மாம்பழம் கேட்கிறார். என்ன செய்வதென்று அறியாத புனிதவதி சிவபெருமானிடம் வேண்டுகிறார்.என்ன அதிசயம்! அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றுகிறது.அதை கணவனுக்கு கொடுக்கிறார். அவர் இந்த மாம்பழம் முதல் பழத்தை விட சுவையாக இருக்கிறதென்று சொல்கிறார். அதை பற்றி அவர் விசாரிக்க புனிதவதி உண்மையை சொல்கிறார்.இதை கேட்ட புனிதவதியின் கணவர் தான் அவருக்கு கணவராக இருப்பதற்கு யோக்கியதை அற்றவர் என்று கருதி அவரை விட்டு செல்கிறார்.புனிதவதி சிவபெருமானிடம் வேண்டுகிறார்.தனக்கு உயிர் இருக்கும் வரை சிவ பெருமானை வணங்கி வாழ்வதற்கு ஒரு உடல் கேட்கிறார். அப்படி அவர் காரைக்கால் அம்மையார் ஆகிறார்.மோக்ஷம் தேடி அம்மையார் கைலாசம் செல்ல சிவ பெருமான் அவரை திருவாலங்காட்டில் சென்று காத்திருக்க சொல்கிறார். திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் காட்சியளித்து முக்தி கொடுக்கிறார்.

இரண்டாவது திருவாலங்காடு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ளது.குலோத்துங்க சோழனால் புனரமைக்கபட்ட ஆலயம் இது. இங்கு இரு சிவ சன்னதிகள் உள்ளது. மூல ஸ்தானம் வட ஆரண்யேஸ்வரர். இன்னொரு சிவ சன்னதிக்கு பெயர் புத்ரகாமேஸ்வரர். அம்மன் பெயர் வண்டார்குழலி.தற்பொழுது இந்த ஆலயம் திருவாடுதுறை ஆதீனத்தின் கட்டுபாட்டில் உள்ளது.ஸ்தல புராண கதைப்படி பரதன் சுபத்ரா என்ற தம்பதியர் குழந்தை வரம் வேண்டி சிவ பெருமானை வேண்டுகிறார்கள். ஒரு நாள் அவர்களுக்கு ஒரு அசரீரி குரல் கேட்கிறது. திருவாலங்காடு சென்று வட ஆரண்யேஸ்வரர் தரிசித்து வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று .அந்த தம்பதியர் ஆலயத்திற்கு சென்றுகோவில் குளத்தில் நீராடி புத்ரகாமேஷ்டி யாகம் நடுத்துகிறார்கள். இங்கு இருக்கும் இரட்டை பிள்ளையார் சந்தான கணபதி என்று அறியபடுகிறார். அவர்களுக்கு குழந்தைகளாக சிவ பெருமானும் பார்வதியும் பிறந்ததாக வரலாறு.இங்குள்ள நந்தி சற்று தாழ்வான நிலையில் உள்ளதால் பாதாள நந்தி என்று அறியபடுகிறது. இன்றும் குழந்தை வரம் வேண்டி இங்கு பலரும் வந்து வணங்கி செல்கிறார்கள்.மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம்.பழைய அம்மன் சன்னதி சற்று சிதிலம் அடைந்த நிலையில் புதிதாக ஒரு அம்மன் சன்னதி அமைத்திருக்கிறார்கள்.புராதன அம்மன் சன்னதி பழைய அம்மன் என்று குறிபிட்டுள்ளார்கள்.

Share