திருமந்திரம் – 7

திருமந்திரம் – 7

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

நெருப்பைவிட சூடானவன், நீரைவிட குளிர்ச்சியானவன். அவன் கருணையை இங்கு முழுமையாக தெரிந்தவர் யாருமில்லை. குழைந்தையைவிட இளமனதுடையவன். பக்தனுக்கு அருகில் இருப்பவன். தாயை விட அதிகமாக அன்பு காட்டுபவன். தாழ்ந்த சடையுடைவன்.

Share